நிவிதிகல பகுதியில் பொது சந்தை கழிப்பறையிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை (05) கழிப்பறையில் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, நிவிதிகல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்தவர் நிவிதிகல பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
குறித்த நபர் கடந்த 03 ஆண்டுகளாக அவரது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பிரிந்து பொதுச் சந்தை கழிப்பறைக்கு அருகில் தற்காலிக கூடாரத்தில் வசித்து வந்ததுடன், மேலும் சிறிது காலமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சம்பவம் குறித்து நிவிதிகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.