
2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றையதினம் சனிக்கிழமை வெளியாகி இருந்தன.
இந்நிலையில் க.பொ.த (உயர்தரப்) பரீட்சை கலைப்பிரிவில் மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மாவட்டத்தில் முதல் இடத்தினைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
குணராஜா அபிசா என்ற மாணவி அளவையியல், மனைப் பொருளியல் மற்றும் தமிழ் ஆகிய பாடங்களில் “ஏ” தர சித்தி பெற்று மாவட்டத்தில் முதலாவதாக வந்து சாதனை படைத்துள்ளார்.