தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நிறைவேற்று குழுவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஜனாதிபதி தலைமையிலான மக்கள் சந்திப்பு இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது.
தேசிய மக்கள் சக்தியின் ‘வெற்றி நமதே ஊர் நமதே’யின் வெற்றிக்கூட்டமாக இந்த கூட்டம் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் எந்த ஒரு அரச வேலைவாய்ப்பும் வழங்கப்படாது என்றும், ஆட்சேர்ப்பு முறையாக அழைக்கப்பட்டு, விண்ணப்பிக்கின்றவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் நேர்மையாக வேலைவாய்ப்பு வழங்கப்படும், என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க நியமிக்கப்பட்டதன் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று சனிக்கிழமை முதன் முறையாக விஜயம் செய்தார்.
இதன்போது வெளிநாட்டு அலுவல்கள் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள், உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பல்வேறு பகுதிகளிலுமிருந்து தமிழ், முஸ்லிம் மக்கள் பங்கெடுத்த இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கான வாழ்த்தினை தெரிவிக்கும் வகையில் பாடல்பாடி அனைவரையும் கவர்ந்த தேசிய கலைஞரை ஜனாதிபதி வாழ்த்துகளை தெரிவித்து தமது பாராட்டினையும் தெரிவித்தார்.