பெரியகல்லாற்றின் மங்கா கல்விப் புகழுக்கு தனது சீரிய அர்ப்பணிப்பான சேவை மூலம் மகுடம் சூடிய மகப்பேற்று நிபுணர் டாக்டர் சீனித்தம்பி தங்கவடிவேல் அவர்களின் சிலை திறப்புவிழாவை அன்னாரின் சகோதரி மற்றும் பிரதம அதிதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் முரளீஸ்வரன் மற்றும் வைத்தியசாலை பொறுப்பதிகாரி டாக்டர் ஞா.சஞ்ஜய் ஆகியோர் இணைந்து திறந்து வைக்க அந்த சிலையின் பிரகாசம் சூரிய ஒளியையும் மீறி பிரகாசித்து.
இத்தனைக்கும் கல்லாற்றுக்கு அழியா புகழ்சேர்த்த கிழக்கின் முதலாவது பெளதிகவியல் பேராசிரியர் தம்பாபிள்ளை பெரியகல்லாற்றின் முதலாவது டாக்டர் ஆறுமுகம் முதலாவது தமிழ் பண்டிதர் தம்பிராசா ஆசிரிய சிரோன்மணி ஆகியோர் பற்றியும் எமது இளம் சந்ததிக்கு தெரியப்படுத்த வேண்டிய முக்கிய வரலாற்றுக் கடமை ஒன்று தவறவிடப்பட்டுள்ளதை கவனத்தில் எடுக்க வேண்டும்.
இதற்கு ஒரு அடித்தளமாக டாக்டர் சஞ்ஜேயின் இந்த அரிய முயற்சியும் முனைப்பும் அமைந்திருக்கின்றது. அவர் ஏதாவது ஒரு முயற்சியில் மக்களின் ஏகோபித்த செல்வாக்குடன் அதிகாரிகள் அவர்மீது கொண்ட நம்பிக்கை நல்லெண்ணம் ஆகியவற்றின் அரவணைப்புடன் சாதித்துக் கொண்டே இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
எனவே ஒருவர் நல்லது செய்து காட்டினால் அதை நாமும் பின்பற்ற முயற்சிப்பதே பொருத்தமான செயற்பாடாகும்.
சிலை திறப்பை தொடர்ந்து அதற்கு பொருத்தமானதாக டாக்டர் சீனித்தம்பி தங்கவடிவேல் அவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மகப்பேற்று விடுதியும் புனரமைப்பு செய்யப்பட்டு கடந்த ஏழு வருடங்களின் பின் திறந்து வைக்கப்பட்டது சிறந்த வரப்பிரசாதமாகும்.
பிரதம விருந்தினர் இவ் விடுதி பற்றி குறிப்பிடுகையில் தனியார் வைத்தியசாலையிலும் பார்க்க சிறப்பாக சகல முக்கிய அம்சங்களுடன் அமைக்கபட்டிருப்பது பாராட்டுக்குரியதாகும் என்று குறிப்பிட்டார்
குறிப்பாக நிதியூட்டம் சுவிற்சலாந்தில் வதியும் சந்திரசேகரன் குடும்பத்தினரால் குடும்ப தலைவியின் நினைவாக செய்யப்பட்டது சிறப்பம்சமாகும். இத்தகைய கருமங்களே நின்று நிலைக்க கூடியவை. எனவே நன்கொடையாளர்கள் இதை முன் உதாரணமாக கொள்ள வேண்டும். நிதி துஸ்பிரயோகம் இடம் பெறாமல் முழுமையாக பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும்.
டாக்டர் சஞ்ஜேயைப் பொறுத்தவரையில் அவர்மீது கொண்ட நன்கொடையாளரின் நம்பிக்கையின் அடிப்படையிலேயே இது சாத்தியமாயிற்று. குடும்ப தலைவியின் நினைவாக கிராமத்திற்கு செய்யும் ஒவ்வொரு விடயங்களும் வரலாற்றுப் பதிவுகளாக நிலைக்கவே செய்யும்