மத்துகமையில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது


களுத்துறை - மத்துகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யட்டதொல பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று புதன்கிழமை (12) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மத்துகம எலதுவ பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து 87 கிராம் கேரள கஞ்சா பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மத்துகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்துகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.