தேசபந்து தென்னக்கோனை கைதுசெய்ய பகிரங்க பிடியாணை



முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றினால் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு இன்று செவ்வாய்க்கிழமை (11) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக வெளிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு மாத்தறை, வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றினால் கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தேசபந்து தென்னக்கோனை கைது செய்ய பொலிஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.