தலைப் பிறை தென்பட்டது ; நாளை நோன்பு பெருநாள்



நோன்புப் பெருநாள் நாளை (31) திங்கட்கிழமை கொண்டாடுவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்று மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இதன்போது ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டதை அடுத்து இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் நாளை நோன்புப் பெருநாளை கொண்டாடலாமென கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது..