தேசபந்து தென்னகோனுக்கு எதிராக சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட பிரேரணை !


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான பிரேரணை ஒன்றில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ளனர்.

அதன்படி, அவரை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் குறித்த பிரேரணை இன்று (25) பிற்பகல் 12.15 மணியளவில் பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டு வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோன், 20 நாட்கள் தலைமறைவாக இருந்த பின்னர் மார்ச் 19 ஆம் திகதி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.