
கொழும்பிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் தொழில் புரிந்த 22 வயது இளைஞன் ஒருவர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பி வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதியன்று, கொழும்பில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் பணிபுரிந்த 22 வயது இளைஞன், கைதுசெய்யப்பட்டமை தொடர்பாக சமூக ஊடகங்களில் சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
இவ்வாறு, சமூகத்தில் தவறான தகவல்கள் பரவாமல் தடுப்பது இலங்கை பொலிஸாரின் பொறுப்பாகும்.
இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டமை தொடர்பான தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், அந்த இளைஞன் ஸ்டிக்கர் ஒட்டுவதையும் தாண்டி கடும் போக்குடையவர் எனத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சந்தேகநபரின் செயற்பாடுகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நீண்டகால விசாரணைகளில் தெரியவந்துள்ளதாவது, இந்த இளைஞன், இணையம் பாவனை மற்றும் ஏனைய முறைகளை பாவித்தமையினால் சில மன உந்துதல்களுக்கு உள்ளானவர் என தெரியவந்துள்ளதுடன், அந்த மன நிலையை அடிப்படையாகக் கொண்டு மதவெறியிலும் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபரின் கணினி வன்பொருள், தகவல் தொழில்நுட்ப மென்பொருள் மற்றும் கையடக்க தொலைபேசிகள் தொடர்பான தடயவியல் விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் காலங்களில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு மக்கள் மத்தியில் தேசிய மற்றும் மத விழாக்கள் நடைபெறவுள்ளன. அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தருகின்றனர்.
இந்நிலையில், இவ்வாறான கைது நடவடிக்கை நாட்டின் அமைதிக்கும் தேசிய பொருளாதாரத்துக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம். இச் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ள விசாரணைகள் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையக ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.