தெங்கு பயிர்ச்செய்கையாளர்களுக்கு நாளை முதல் மானியம் !


தெங்கு பயிர்ச்செய்கையாளர்களுக்கு நாளை முதல் மானிய முறையில் உரம் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஸ்யாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 27,500 மெற்றிக் டன் உரத்துடன் யூரியாவை கலந்து தெங்கு பயிர்ச்செய்கைக்கான உரம் தயாரிக்கப்பட்டு வருவதாக அரச உர நிறுவனம் அறிவித்துள்ளது.

சந்தையில் 9,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் 50 கிலோகிராம் உர மூடையை 4,000 ரூபாவுக்கு

மானிய விலையில் விற்பனை செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது