பாணந்துறை - இரத்தினபுரி வீதியில் திடீரென தீப்பற்றி எரிந்த வேன்



பாணந்துறை - இரத்தினபுரி வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வேன் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து நேற்று புதன்கிழமை (26) காலை 11.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், தீ விபத்தில் எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.