இதுவரையான காலப்பகுதிக்குள் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பில் 1,401 முறைப்பாடுகள் பதிவு !


இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் 1,401 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதிகளவிலான முறைப்பாடுகள் சிறுவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் உரிமை மீறல்கள் தொடர்பானவை ஆகும்.

இந்நிலையில், சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைச் செயல்கள் தொடர்பில் 332 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதேவேளை, சிறுவர்களின் கல்வி உரிமை மீறப்படுவது தொடர்பில் 279 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் 1929 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும்.