தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் சமாதானம் தொடர்பில் குறித்த காலத்தில் நிலவிய அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுப்பதற்காக 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் 2022ஆம் 12ம் இலக்க பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்த) சட்டம் என்ற ரீதியில் குறித்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, தேசிய பாதுகாப்பு தொடர்பான விரிவான சட்டத்தை பிரகடனப்படுத்துவதற்கான இடைக்கால நடவடிக்கை பின்பற்றப்பட்டள்ளது.
அதன் பின்னர் பயங்கரவாதத்தை முறியடித்தல் தொடர்பான சட்ட வரைபு தயாரிக்கப்பட்டுள்ளதுடன், மேற்குறித்த சட்ட வரைபு உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய மேற்குறித்த சட்ட வரைபில் தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை இனங்கண்டு குறித்த திருத்தங்களை உள்ளடக்கி சட்ட வரைஞரால் திருத்த சட்ட வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது.
சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள இறுதி வரைபு தொடர்பாக மேலும் விடயங்களை ஆய்வு செய்து மேற்குறித்த சட்ட வரைபை மேலும் மேம்படுத்துவதற்காக பொருத்தமான யோசனைகளை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அரசகுலரத்ன தலைமையிலான குழுவை நியமிப்பதற்காக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.