கிழக்கு மாகாணம் நற்பிட்டிமுனையை பூர்விகமாக கொண்டவரும் , UK- Liverpool Bootle நகரில் வசித்த 28 வயதான காயத்ரி ஜெயதீசன், கடந்த ஜனவரி 25 அன்று உள்ள தனது வீட்டில் நண்டு கறி சாப்பிட்ட பின்னர் உணவு ஒவ்வாமை காரணமாக ( allergic reaction to seafood ) உயிரிழந்துள்ளார் .
அன்றைய தினம் திருமதி காயத்ரி ஜெயதீசன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது அவர் தனது 15 மாதமான மகன் மற்றும் இலங்கையிலிருந்து மகளின் குடும்பத்தை பார்க்க வந்திருந்த அவரது தாயாருடன் இருந்துள்ளார் .
வேலைக்கு சென்ற கணவருக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவித்தார். அவர் ஆம்புலன்ஸை அழைத்தும் மருத்துவர்களால் அவரது மனைவியைக் காப்பாற்ற முடியவில்லை.