இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள சுகாதார நிபுணர்கள் 12,14 மற்றும் 16 வயதுகளுக்கு இடைப்பட்ட சிறுவர்களே மேற்படி நோயினால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலுள்ள சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தில் இடம்பெற்றுள்ள விசேட ஊடக சந்திப்பின் போது ,ஸ்ரீ ஜயவர்தபுர பல்கலைக்கழகத்தின் சிறுவர் நோய் தொடர்பான ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் ருவந்தி பெரேரா உள்ளிட்ட மருத்துவத்துறை நிபுணர்களே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.