அக்கரைப்பற்று - பொத்துவில் வீதியில் மோட்டார் சைக்கிள் பாலத்தின் பாதுகாப்பு வேலியில் மோதி விபத்து ; ஒருவர் பலி !


அக்கரைப்பற்று - பொத்துவில் வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மூன்று பேருடன் அக்கரைப்பற்றுவில் இருந்து பொத்துவில் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியின் இடது பக்கம் கவிழந்து முகத்துவாரம் பாலத்தின் பாதுகாப்பு வேலியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் பின்னர், சாரதியும், பின்னால் பயணித்த இருவரும் படுகாயமடைந்து திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சாரதி மற்றும் பின்னால் பயணித்த ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சாரதி உயிரிழந்துள்ளார்.

விநாயகபுரம் 03 இல் வசிக்கும் 34 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.