மட்டக்களப்பு ஓந்தாச்சிமடத்தில் விபத்து : இளைஞன் உயிரிழப்பு !



மட்டக்களப்பு கல்முனை பிரதான சாலையில் ஓந்தாச்சிமடம் பகுதியில் மோட்டார்சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளின் பின் பகுதியில் அமர்ந்து பயணித்த வெல்லாவெளி 39ம் கொலனியைச் சேர்ந்த 16வயதான வேனுசன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாகவும் மோட்டார்சைக்கிளை செலுத்திச் சென்ற பெரியபோரதீவை சேர்ந்த இளைஞன் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுவதுடன் துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஓந்தாச்சிமடத்தை சேர்ந்த சிறுவனுக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

காயமடைந்தவர்கள் களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து செல்கின்றனர்