மட்டக்களப்பு மாவட்ட தமிழரசு கட்சியின் புதுமுக வேட்பாளர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்களின் பிரதான கட்சி அலுவலகம் திறந்து வைப்பு!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட புதுமுக வேட்பாளர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் அவர்களின் பிரதான கட்சி அலுவலகம் வந்தாறுமூலையில் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.

பாராளுமன்ற வேட்பாளர் இ.சிறிநாத் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் முன்னாள் தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம், தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணி தலைவர் சோபனன் உள்ளிட்ட தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.