உச்சம் தொட்ட வெற்றிலை, பாக்கு விலை !



இந்த நாட்களில் வவுனியாவில் பாக்கு விலை அதிகரிப்புடன், வெற்றிலை ஒன்றின் விலையும் 150 ரூபாவாக அதிகரித்துள்ளது.

4 ரூபாவாக இருந்த சாதாரண பாக்கு 30 ரூபாவாகவும், நடுத்தர அளவிலான பாக்கு 40 ரூபாவாகவும், பெரிய பாக்கு ஒன்று 50 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவிற்கு வரும் பழுக்காத பாக்குகளை இரசாயனம் தடவி பழுத்த பாக்குகளாக சந்தைக்கு விநியோகம் செய்யும் கொள்ளையொன்று அம்பலமாகியுள்ள நிலையில்,

வவுனியா மக்களும் வியாபாரிகளும் யாழ்ப்பாண பாக்குகளை வாங்குவதை தவிர்த்து வருகின்றனர்.

பாக்கு விலை உயர்வு மற்றும் பாக்கு தட்டுப்பாடு காரணமாக 50 ரூபாயாக இருந்த வெற்றிலை 150 ரூபாயாக உயர்ந்துள்ளது.

சூப்பர் வெற்றிலை என அழைக்கப்படும் வெற்றிலை பாக்கு பொதி ஒன்றின் விலை 200 ரூபாவாக உயர்ந்துள்ளதுடன், அதில் வெற்றிலை பாக்கு உள்ளடங்களாக பல பொருட்களை உள்ளடக்கியுள்ளது.