திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டி - திருகோணமலை கிண்ணியாவில் சம்பவம் !


திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் நேற்றிரவு பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி திடீரென தீப்பற்றி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

மூதூரில் இருந்து கிண்ணியாவுக்குச் சென்ற முச்சக்கர வண்டியே கிண்ணியா பகுதியில் தீப்பற்றி எரிந்துள்ளது. முச்சக்கர வண்டி சாரதி முச்சக்கர வண்டியை விட்டு இறங்கி உயிர் தப்பியுள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.