கற்பிட்டி, திகழி முஸ்லிம் மகா வித்தியாலய ஆசிரியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு !


கற்பிட்டி, திகழி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றும் சித்திரப்பாட ஆசிரியர் ஒருவர் மீது திகழியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த (10/10) அன்று தாக்குதல் மேற்கொள்ள முயன்றுள்ளார். இதில் தலையிட்ட அதிபர் உட்பட ஏனைய சில ஆசிரியர்களுக்கும் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி மிக மோசமாக குறித்த இளைஞர் நடந்து கொண்டுள்ளார்.

இதற்கு எதிராகவும் ஆசிரியர்களின் பணிக்கு பாதுகாப்பு வேண்டியும்

ஆசிரியர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலை இல்லாமல் செய்து சுதந்திரமான கற்றல் கற்பித்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஏதுவான சூழ்நிலையை ஏற்படுத்தி தருமாறும் பாடசாலை உள் விவகாரங்களில் தலையீடு செய்யும் நபர்களின் அராஜகங்களை தடுத்து நிறுத்துமாறும் கோரி நேற்று புதன்கிழமை (16) முதல் திகழி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் சகல ஆசிரியர்களும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் குதித்தனர். இதுவிடயமாக சம்பந்தப்பட்டோர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர்கள் கோரியுள்ளனர்.