மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த லொறி பாலத்தோப்பூர் பகுதியில் மற்றுமொரு வாகனத்தினை முந்திச் செல்ல முற்பட்டபோது இவ்விபத்து ஏற்பட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
இவ்விபத்தில் எதுவித சேதங்களும் ஏற்படவில்லையெனவும் தெரிய வருகின்றது.
தற்போது திருகோணமலை மாவட்டத்தில் மழை பெய்து வருகின்றமையால் வாகன சாரதிகள் மிகவும் கவனமாக வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் போடப்பட்டிருக்கின்ற பதாகைகளை பார்த்து கவனமாக வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் போக்குவரத்து பொலிஸார் வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.