ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணிக்கு ஆதரவு வழங்க வியாழேந்திரன் முடிவு !


எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இன்று அறிவித்தார்.

மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக,வியாழேந்திரன் தலைமையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு நிரகாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.