நாரம்மல பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், திருடப்பட்ட பொருட்கள் மற்றும் பணத்தைப் பயன்படுத்தி கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாரம்மல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.