உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பிலான இரண்டு அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்த விரும்பவில்லை - உதயகம்மன்பில !


உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பிலான இரண்டு அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்த விரும்பவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பான இமாம் அல்விஸ் விசாரணை குழுவின் அறிக்கையில் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவிற்கு ஆதரவு வழங்கியவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதால் அந்த அறிக்கைகளை பகிரங்கப்படுத்த விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 38 ஆவது பிரிவின் ஏற்பாடுகளை ஜனாதிபதி மீறியுள்ளார்.ஆகவே ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டு வர முடியும்.என அவர் குறிப்பிட்டுள்ளார்.