டயர் களஞ்சியசாலையில் திருட்டு ; சந்தேக நபர்கள் கைதுடயர் களஞ்சியசாலையில் திருட்டு ; சந்தேக நபர்கள் கைது !


இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திரிவானகெட்டிய பிரதேசத்தில் உள்ள டயர் களஞ்சியசாலை ஒன்றிலிருந்து 15 இலட்சம் ரூபா பெறுமதியான 169 டயர்களை திருடிய சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று (20 ) கைது செய்யப்பட்டுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த திருட்டு சம்பவம் கடந்த செப்டெம்பர் மாதம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்தினபுரி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 46 மற்றும் 52 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் இந்த டயர் களஞ்சியசாலையில் பணிபுரிபவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.