”தூய்மையான இலங்கை” வேலைத் திட்டம் ஆரம்பம் !



”தூய்மையான இலங்கை” என்ற பெயரில் ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கப்பட்டு புதிய வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஹோமாகம பகுதயில் இடம்பெற்ற கூட்டத்தில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் போது ”சுற்றுச் சூழலை இலக்காக கொண்டு இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும், குறித்த திட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாகவும், அனைவருக்கும் சமமாக இது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.