சந்தையில் அரிசிக்குத் தட்டுப்பாடு காரணமாக அரிசியின் விலை அதிகரிப்பு !


அண்மையில் அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் கட்டுப்பாட்டு விலையில் அரிசியை சந்தைக்கு விடுவதாக தெரிவித்த போதிலும், இன்னும் கட்டுப்பாட்டு விலையில் அரிசியை கொள்வனவு செய்ய முடியாதுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

சந்தையில் தற்போது அரிசிக்குத் தட்டுப்பாடு நிலவிவருவதன் காரணமாக அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக கீரி சம்பா தவிர்ந்த ஏனைய அரிசி வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றன.

தற்போது சந்தையில் ஒரு கிலோகிராம் அரிசி 210 ரூபாய் முதல் 230 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் ஒரு கிலோகிராம் நாட்டு அரிசி 220 ரூபாவுக்கும், சம்பா அரிசி 230 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாகச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.