மட்டக்களப்பில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்



எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடு சின்னத்தில் போட்டியிடும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையில் இன்று வியாழக்கிழமை (10) வேட்புமனு தாக்கல் செய்தனர்.

கட்சியின் வேட்பாளர்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறினேசன், மட்டக்களப்பு  மாநகர சபை முன்னாள் மேஜர் தியாகராசா சரவணபவன், ஏறாவூர் பற்று முன்னாள் தவிசாளர் சின்னத்துரை சர்வானந்தன், வைத்தியர் ஸ்ரீநாத், இளைஞர் அணித் தலைவர் கிருஷ்ணபிள்ளை செயோன், அருணாச்சலம் கருணாகரன், ஜெயந்தி உட்பட 8 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்.