நபர் ஒருவரை சு ட் டு க் கொ லை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 2 துப்பாக்கிதாரிகள் கைது !


மாத்தறை, கேகனதுர பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு துப்பாக்கிதாரிகள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 15ஆம் திகதி முச்சக்கரவண்டியில் பயணித்த நபரை காரில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றிருந்தார்.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் வாகனங்களை பறிமுதல் செய்யும் நபரொருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.