1066 கிலோகிராம் பீடி இலைகள் வடமேல் கடற்பரப்பு பகுதியில் மீட்பு !


1066 கிலோகிராம் பீடி இலைகள் வடமேல் கடற்பரப்பு பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. புத்தளம் தொடக்கம் சிலாவத்துறை வரையான கடற்பரப்பு பகுதியில் கடந்த 10 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போதே இந்த பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சிலாபத்துறை , கல்ஆறு, அரிப்பு உள்ளிட்ட பகுதிகளிலேயே இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்ப்பட்டுள்ளது. கடற்படையினர் கைப்பற்றிய பீடி இலைகள் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மற்றும் மன்னார் சங்கத்திணைக்களத்தினரிடத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.