உள்நாட்டு துப்பாக்கிகளுடன் 06 பேர் கைது !



உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 06 துப்பாக்கிகளுடன் 6 பேர் கொண்ட குழுவொன்றை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.விசேட அதிரடிப்படை சூரியவௌ முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய ஹம்பாந்தோட்டை பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அதிகாரிகள் குழுவொன்று சூரியவௌ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்சபுகல பகுதியில் சுற்றிவளைப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளது.

சூரியவௌ பிரதேசத்தில் வசிக்கும் 28, 29, 34, 39 மற்றும் 47 வயதுடைய 6 பேரை கைதுசெய்துள்ளனர்.

குறித்த குழுவினர் மேலதிக விசாரணைகளுக்காக சூரியவௌ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.