மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞனின் கால் பாதம் துண்டிப்பு !


யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவரது கால் பாதம் துண்டாடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் சுன்னாகம் பகுதியில் இன்று (10) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் , மோட்டார் சைக்கிள் சாரதியின் கால் , மோட்டார் சைக்கிளின் செயினுக்குள் அகப்பட்டு , பாதம் துண்டாடப்பட்டுள்ளது

விபத்தினை அடுத்து காயப்பட்டவரை அவ்விடத்தில் இருந்தவர்கள் மீட்டு அம்பியூலன்ஸ் வண்டியில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததுடன், துண்டாடப்பட்ட பாதத்தினையும் மீட்டு அம்பியூலன்ஸ் வண்டியில் அனுப்பி வைத்துள்ளனர்.

விபத்து சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.