பட்டிருப்பு தேசிய பாடசாலை - களுவாஞ்சிகுடியை தரிசித்த சிரேஷ்ட ஆராய்ச்சி விஞ்ஞானி ரத் வன்னிதம்பி.



அமெரிக்கா இன்ரல் நிறுவனத்தில் சிரேஷ்ட ஆராய்ச்சி விஞ்ஞானியாக கடமையாற்றும் இரத்னேஸ்வரன் வன்னிதம்பி (Rath Vannithamby) அவர்கள் இன்று (02.09.2024) மட்/ பட்டிருப்பு தேசிய பாடசாலை - களுவாஞ்சிகுடியை தரிசித்ததுடன் மாணவர்களுக்கு (6G & AI)  விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்றை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலையின் முதல்வர் எம். சபேஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் பங்குபற்றிய மாணர்வர்கள், வலையமைப்பு (1G - 6G) தொழினுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறி (AI) தொழினுட்பம் பற்றியும் பல்வேறு விடயங்களை மிகுந்த ஆர்வத்துடன் அறிந்து கொண்டனர். அத்துடன் குறித்த துறைகளில் வினாக்களைக் கேட்ட மாணவர்களுக்கு விஞ்ஞானியினால் பரிசில்கள் வழங்கப்பட்டமையும் சிறப்பம்சமாகும்.