திருக்கோவில் பதில் பிரதேச செயலாளராக ராகுலநாயகி நியமனம் !


திருக்கோவில் பிரதேச செயலகத்தின் பதில் பிரதேச செயலாளராக நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி சஜிந்திரன் ராகுலநாயகி நியமிக்கப்பட்டார்.

சுற்றுலா வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனும் கருத்திலான சர்வதேச பயிற்சி நெறிக்காக சீனாவுக்கு இரண்டு வாரங்கள் திருக்கோவில் பிரதேச செயலாளர் த. கஜேந்திரன் சென்றிருப்பதால் அந்த இடத்திற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பதில் பிரதேச செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் திருமதி ராகுலநாயகி சஜிந்திரன், நேற்று முன்தினம் பிரதேச செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்

இக் கூட்டத்தில் உதவி பிரதேச செயலாளர் திருமதி. எஸ்.நிருபா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி அனோஜா உஷாந்த், நிர்வாக உத்தியோகத்தர் டி. மங்களா உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.