மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி !


வவுனியா, பூவரசங்குளம் குருக்கல்புதுக்குளம் பகுதியில் இன்று (27) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாக பூவரசன்குளம் பாெலிசார் தெரிவித்தனர்.

வவுனியா குருக்கல்புதுக்குளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மாேதி விபத்துக்குள்ளானது.

இதன்பாேது விபத்துக்குள்ளான மாேட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்ததுடன், பயணித்த இளைஞனும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

இச் சம்பவத்தில் 30 வயதுடைய குருக்கல்புதுக்குளம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் சர்மிளன் என்ற இளைஞரே மரணமடைந்தவராவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.