அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் உயிர் மாய்ப்பு !


அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் உயிர் மாய்த்து உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

புத்தளத்தை சேர்ந்த 23 வயதான மனோ யோகலிங்கம் என்ற இளைஞன், தமக்கு தாமே தீ மூட்டிக்கொண்டு உயிரிழந்துள்ளார்.

புகலிடம் கோரி நீண்டகாலமாக விசாவிற்கு காத்திருந்த நிலையில், மன உளைச்சல் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த இளைஞனின் மரணத்திற்கு, அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புகலிடக்கொள்கையே அவரின் மரணத்திற்கு காரணம் என தமிழ் அகதிகள் பேரவை குற்றம் சாட்டியுள்ளது.