பொலிஸ் ஊடகப் பேச்சாளராக ருவன் குணசேகர நியமனம் !


பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக பிரதிப் பொலிஸ் மா அதிபர் ருவன் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தனிப்பட்ட காரணங்களுக்காக வெளிநாடு சென்றுள்ளார்.

இதேவேளை நிஹால் தல்துவ நாடு திரும்பிய பின்னர், அவர் மீண்டும் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக பணியாற்றுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.