பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் தொடர்பான தீர்மானம் நாளை மறுதினம் !


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானம் நாளை மறுதினம் திங்கட்கிழமை (29) அறிவிக்கப்படுமென கட்சி தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபைக் கூட்டம் எதிர்வரும் திங்களன்று கூடும் போது அதற்கான தீர்மானம் எட்டப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.