அஞ்சல் மூல வாக்களிப்பு : சுற்றறிக்கை இன்று வெளியாகும் !


ஜனாதிபதித் தேர்தலுக்கு அஞ்சல் மூலம் வாக்குகளை விண்ணப்பிப்பது தொடர்பான சுற்றறிக்கை இன்று வெளியிடப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று முதல் 10 நாட்களுக்குள் ஜனாதிபதித் தேர்லுக்கான அஞ்சல் மூல வாக்குகளுக்கு அரச ஊழியர்கள் விண்ணப்பிக்க முடியும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் 9ஆவது ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு எதிர்வரும் 15ஆம் திகதி கோரப்படவுள்ளது.

குறித்த தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்று (26) முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை செலுத்த முடியும் என அந்த வர்த்தமானி அறிவித்தலில் அறிவிக்கப்பட்டுள்ளது.