நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படைப் பிரிவில் பணிபுரியும் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் வேயங்கொடை பகுதியில் வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்தனர். இந்தக் கொள்ளை சம்பவம் நீர்கொழும்பு - கொழும்பு வீதியில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.