கதிர்காமம் பாதை யாத்திரைக்கு இராணுவத்தினர் உதவி !


வருடாந்த கதிர்காமம் பாத யாத்திரை நேற்று முன்தினம் குமண தேசிய வனப் பூங்காவின் உகந்த தேவாலயத்துக்கருகில் ஆரம்பமானது. பாதயாத்திரை குமண -யால தேசிய வனப் பூங்கா ஊடாக சுமார் 79 கிலோ மீற்றர் பயணித்து கதிர்காமம் ஆலயத்தை சென்றடைகிறது.

வருடாந்தம் நடைபெறும் இந்நிகழ்வில் நாடளாவிய ரீதியிலிருந்து பெருமளவிலான அடியார்கள் பங்குபற்றுவதுடன், இந்நிகழ்வை சிறப்பாக நடத்துவதற்கு இராணுவத்தினரால் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன.

இங்கு பயணிக்கும் பக்தர்களின்பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இராணுவத் தளபதியின் பணிப்புரையின் பிரகாரம் பாத யாத்திரையில் கலந்து கொள்பவர்களுக்கு நீர் மற்றும் சுகாதார வசதிகளை வழங்க இராணுவத்தினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.