இந்நிலையில், இருவரையும் எதிர்வரும் 27ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் வியாழக்கிழமை (13) உத்தரவிட்டார்.
காணி ஒன்றுக்கு மண் நிரப்புவதற்கு அனுமதி வழங்க அக்கரைப்பற்று நீர்ப்பாசன திணைக்களத்தில் கடமையாற்றிவரும் எந்திரி இலஞ்சம் கோரியதாக நபரொருவர் கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து சம்பவதினமான கடந்த புதன்கிழமை (12) அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள நீர்ப்பாசன காரியாலயத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் மாறு வேடத்தில் காத்திருந்தனர்.
அங்கு இலஞ்சமாக கோரிய பணத்துடன் முறைப்பாடு செய்த நபர் எந்திரியின் வாகன சாரதியுடன் சென்று 2 இலட்சம் ரூபா பணத்தை எந்திரியிடம் வழங்கியுள்ளார். இதன்போது, அங்கு மாறுவேடத்தில் இருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு அதிகாரிகள் வாகன சாரதியையும், எந்திரியையும் பணத்துடன் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தியபோது இவர்களை எதிர்வரும் 27 ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியவில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.