காதலனை சந்தித்துவிட்டு வீடு திரும்பிய மாணவி மீது ஐவர் கூ ட் டு ப்பா லி ய ல் து ஷ் பி ர யோக ம் : ஒருவர் கைது !


ஹங்வெல்ல, எம்புல்கம பிரதேசத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவியைக் கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த குற்றத்தில் 5 இளைஞர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவி நேற்று வெள்ளிக்கிழமை (21) தனது காதலனைச் சந்தித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் மாணவியை பலாத்தகாரமாக ஏற்றிச்சென்று சுடுகாட்டுக்கு அழைத்துச்சென்று அங்கு கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொஸ்கம பகுதியைச் சேர்ந்த மாணவியொருவரே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் சம்பவம் தொடர்பில் ஏனைய இளைஞர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.