ஜூலை 07- 16 ஆம் திகதி வரை இலங்கையில் போரா மாநாடு !


நாட்டில் நடத்தப்படவுள்ள போரா சமூகத்தின் வருடாந்த ஆன்மீக மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்குத் தேவையான முழுமையான ஆதரவை வழங்குமாறு, தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

போரா மாநாடு தொடர்பில் நேற்று முன்தினம் (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலே, சாகல ரத்நாயக்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இந்த ஆண்டு பாகிஸ்தானின் கராச்சியில் நடைபெறவுள்ள போரா சமூகத்தின் ஆன்மீக மாநாட்டுக்கு இணையான, போரா ஆன்மீக மாநாடு ஜூலை 07 முதல்16 வரை பம்பலப்பிட்டி போரா பள்ளிவாசல், இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டுக்காக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து சுமார் பதினைந்தாயிரம் போரா சமூகத்தினர் நாட்டுக்கு வரவுள்ளனர்.

இவர்களுக்கான விமான நிலைய வசதிகள் உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் பெற்றுக் கொடுப்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.