ATM இயந்திரத்தை உடைத்து ஒரு கோடி ரூபா பணத்தை கொள்ளையிட்ட மூவர் கைது


புத்தளம் - மதுரங்குளி பிரதேசத்திலுள்ள வங்கியொன்றில் பணம் பெறும் தானியக்க இயந்திரத்தை (ATM) உடைத்து பணத்தை கொள்ளையடித்த குற்றத்திற்காக தேடப்பட்டு வந்த மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி குறித்த பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் பணம் பெறும் தானியக்க இயந்திரத்தில் (ATM) இருந்து 10,549,000 ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.