தலைமைத்துவ பயிற்சியின்போது ஏரியில் வீழ்ந்து 28 வயதான இளைஞர் பலி!


ஊவா - குடாஓயா பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற தலைமைத்துவ பயிற்சியின்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 28 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜூலை 6ஆம் திகதி ஊவா-குடாஓயா கொமாண்டோ பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற தலைமைத்துவ நிகழ்ச்சியில் உயிரிழந்தவர் உட்பட நிறுவனத்தின் ஊழியர்கள் குழுவொன்று பங்குபற்றியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போதே சேறும் சகதியுமான ஏரி ஒன்றில் வீழ்ந்து இவர் உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் இலங்கை இராணுவம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.