புதிய வன்னியனார் வீதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் ஆலயத்திலேயே நேற்று (திங்கட்கிழமை) அதிகாலை இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.
குறித்த ஆலயத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு அங்குள்ள ஆஞ்சநேயர் சுவாமி சிலையில் போடப்பட்டிருந்த நகைகள் மற்றும் ஊண்டியலில் இருந்த பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.
இச்சம்பவத்தில் கொள்ளையிடப்பட்ட நகைகளின் பெறுமதி சுமார் மூன்று இலட்சத்திற்கும் அதிகம் என அந்த ஆலயத்தின் பரிபாலனசபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட குற்றத் தடயவியல் பிரிவு பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு பொலிஸார் ஆகியோர் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.