கல்முனை தரவைச்சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 10வது நாள் திருவிழா நிகழ்வானது இன்று மாலை கல்முனை மாநகரில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
கல்முனையின் எல்லையில் வீற்றிருந்து அருள் பாலிக்கின்ற ஸ்ரீ தரவைச்சித்தி விநாயகர் சப்பரத்தில் அழைத்து வரப்பட்டு விசேட பூஜைகளும் இடம்பெற்றன. மேலும் சிறுவர்களின் கலைநிகழ்வுகளும் இதன்போது நடைபெற்றன. இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பகதர்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
கல்முனையின் எல்லையில் வீற்றிருந்து அருள் பாலிக்கின்ற ஸ்ரீ தரவைச்சித்தி விநாயகர் சப்பரத்தில் அழைத்து வரப்பட்டு விசேட பூஜைகளும் இடம்பெற்றன. மேலும் சிறுவர்களின் கலைநிகழ்வுகளும் இதன்போது நடைபெற்றன. இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பகதர்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.