இடி,மின்னல் தாக்கம் அதிகமாக இருக்கும்.!

வங்­காள விரி­கு­டாவில் ஏற்பட்டுள்ள தாழ­முக்­கத்தின் கார­ண­மாக நாடு­பூ­ரா­கவும் மழை வீழ்ச்சி அதி­க­ரிக்கும். அத்­துடன் இடி, மின்னல் தாக்­கமும் அதி­க­மாக காணப்­படும். ஆகவே மக்கள் அவ­தா­ன­மாக செயற்­ப­ட வேண்டும் என வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

இது தொடர்பில் வளி­மண்­டல­வியல் திணைக்­க­ளத்தின் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;


வங்­காள விரி­கு­டாவின் தாழ­முக்கம் தொடர்ந்தும் இலங்­கையில் நிலைத்து நிற்கும் என்­ப­தனால் வடக்கு, கிழக்கு, சப்­ர­க­முவ, மத்­திய, ஊவா, தென் மாகாணம் உள்­ளிட்ட அனைத்து பகு­தி­க­ளிலும் மழை வீழ்ச்சி அதி­க­ரிக்கும். இதன்­பி­ர­காரம் 75 மில்­லி­மீற்றர் மழை வீழ்ச்சி குறித்த பிர­தே­சங்­களில் பதி­வாகும்

மேலும் இடி, மின்னல் கூடு­த­லான தாக்­கத்தை செலுத்தும் என்­ப­தனால் மக்கள் அவ­தா­ன­மாக செயற்­பட வேண்டும்.

எனவே நாடுபூராகவும் சீரற்ற காலநிலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.